• July 10, 2025
  • NewsEditor
  • 0

தமிழில் சினிமா தொடங்கிய காலகட்டங்களில் இலங்கை தயாரிப்பாளர்கள் பலர் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கள் திரைப்படங்களைத் தயாரித்தனர். முதல் சிங்களப் படமான ‘கடவுனு பொருண்டுவா’ தென்னிந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டது.

இலங்கை திரைப்படத்துறையின் முன்னோடியான எஸ்.எம்.நாயகம் அதைத் தயாரித்தார். அவர் சித்ரகலா மூவிடோன் என்ற சினிமா ஸ்டூடியோவை மதுரையில் நிறுவி படங்களைத் தயாரித்து வந்தார். அவரைப் போலவே இலங்கையைச் சேர்ந்த எம்.ஹெச்.எம்.மூனாஸ் சில வருடங்கள் சென்னையில் வசித்து வந்தார். அவர் தயாரிப்பில் உருவான படம், உலகம். வசனம், பாடல்களை அவரே எழுதினார். 1950-க்கு முன் நடித்துக் கொண்டிருந்த பெரும்பாலான நடிகர்கள் இதில் நடித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *