
சென்னை: அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே அவர்களது கூட்டணி குறித்து விமர்சிக்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் இருந்து நான் வெளியேறியபோது, ‘‘தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க’’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னை வாழ்த்தினார். அவருக்கு தம்பியாக களத்தில் நான் பணியாற்றியது அதிமுக தலைவர்களுக்கு தெரியும். பாஜகவால் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறியாமல் இருக்கிறார்.