
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பேரவை துணைத் தலைவரிடம் நேரு எம்எல்ஏ ராஜினாமா கடிதம் அளித்தார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு. இவர் ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்கு தனது ஆதரவை அளித்து வந்தார். இதனிடையே சுயேச்சை எம்எல்ஏ நேரு, பொது நல அமைப்பினருடன் இணைந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடங்கினார். இதைத் தொடர்ந்து சமூக அமைப்புகளுடன் சென்று டெல்லியில் அவர் போராட்டம் நடத்தினார்.