
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா? என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் நாளை நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார்.