
மும்பை: உணவு கெட்டுப்போனதாகச் சொல்லி மும்பை எம்எல்ஏக்கள் கேன்டீன் ஊழியர்களை தாக்கியது குறித்து சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பையில் எம்எல்ஏக்களுக்கான விடுதியில் உள்ள கேன்டீனில் நேற்று ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதன்பின்னர், கேன்டீனில் வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போனதாக சொல்லி வாக்குவாதம் செய்த சஞ்சய் கெய்க்வாட், அங்கிருந்த ஊழியர்களையும் கடுமையாக தாக்கிய காட்சிகள் இணையத்தில் வைரலானது.