• July 9, 2025
  • NewsEditor
  • 0

அதிமுக உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்த நாள் முதல் வார்த்தைக்கு வார்த்தை ‘கூட்டணி ஆட்சி’ என்று சொல்லிவரும் பாஜக-வின் பேச்சு அதிமுக-வினரின் வயிற்றில் இப்போதே புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. அ​தி​முக இதற்கு முன்​பும் பாஜக உடன் கூட்​டணி வைத்​துள்​ளது. ஆனால், அப்​போதெல்​லாம் கொடுத்​ததை பெற்​றுக்​கொள்​ளும் மனப்​பான்​மையோடு இருந்​தது பாஜக. ஆனால் இப்​போது, கேட்​பதை கொடுக்​கவைக்​கும் முடிவோடு அணி சேர்ந்​துள்​ளார்​கள். அந்த நினைப்​பில் தான், கூட்​டணி உறு​தி​யானதுமே ‘கூட்​டணி ஆட்​சி’ என நெருப்பை பற்​ற​வைத்​தார் அமித் ஷா.

கூட்​டணி ஆட்சி என்ற பாஜக-​வின் பேச்சை அதி​முக-​வினர் யாரும் ரசிக்​க​வில்​லை. இபிஎஸ் தொடங்கி கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் அனை​வ​ரும், “அதி​முக தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்​சி​யமைக்​கும்” என அடித்​துச் சொல்​கி​றார்​கள். ஆனாலும், பாஜக தனது ‘கூட்​டணி ஆட்​சி’ முழக்​கத்​தைக் கைவிடவே இல்​லை. சமீபத்​தில் மதுரை வந்​த​போதும் அமித் ஷா மீண்​டும் இதை உறு​தி​செய்​து​விட்​டுப் போயிருக்​கி​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *