• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பணிநிரந்​தம் செய்ய வலி​யுறுத்தி சென்​னை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணிநியமனம் செய்​யப்​படு​கின்​றனர். அதன்​படி, தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர்.

இவர்​கள் பள்​ளி​களில் வாரந்​தோறும் 3 நாட்​கள் பாடம் நடத்​து​வார்​கள். அதற்கு ரூ.12,500 மாத சம்​பள​மாக தரப்​படு​கிறது. மேலும், பணிநிரந்​தரம் செய்​யக்​கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதற்​கிடையே, ஆட்​சிக்கு வந்தால் தற்​காலிக ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள் என்று திமுக தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *