
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி ராகுல் பர்வானி, சபா குரேஷி ஆகிய இரண்டு நபர்கள் கடந்த 18 மாதங்களாக பல கோடி ரூபாயை ராஜ் லீலாவிடம் இருந்து பறித்துள்ளனர்.
இந்த நிலையில் மேலும் பணம் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததையடுத்து அந்த பட்டயக் கணக்காளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் லீலாவுக்கு பங்குச் சந்தையில் அதிக முதலீடுகள் மற்றும் அதிக சம்பளம் பெறுவதை தெரிந்து கொண்டு திட்டமிட்டு அவர்கள் மிரட்டியுள்ளனர்.