• July 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பஞ்​சாபில் காவல் நிலை​யங்​கள், மத வழி​பாட்டு தலங்​கள் மற்​றும் பிரபலங்​களின் வீடு​கள் மீதான 14 கையெறி குண்டு தாக்​குதல் சம்​பவங்​களில் தேடப்​பட்டு வந்​தவர் ஹேப்பி பாசியா என்​கிற ஹர்​பிரீத் சிங். பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​பு, காலிஸ்​தான் தீவிர​வாத குழு​வான பப்​பர் கல்சா இன்​டர்​நேஷனல் (பிகேஐ) ஆகிய​வற்​றுடன் தொடர்​புடைய​வர்.

இவரை பற்​றிய தகவலுக்கு என்ஐஏ ரூ.5 லட்​சம் வெகுமதி அறி​வித்​திருந்​தது. இந்​நிலை​யில் பாசியா கடந்த ஏப்​ரல் 17-ம் தேதி கலி​போர்​னி​யா​வில் எப்​பிஐ மற்​றும் அமெரிக்க குடியேற்​றத்​துறை அதி​காரி​களால் கைது செய்​யப்​பட்​டார். ஹேப்பி பாசியா விரை​வில் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்பட உள்​ள​ார் என்று மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *