• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் 10 துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து 4 மணி நேரம் ஆய்வு மேற்​கொண்டு விவரங்களை கேட்​டறிந்​தார். சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை, திட்​டம் மற்​றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்​கள் துறை, போக்​கு​வரத்​துத் துறை, உயர்​கல்​வித் துறை, தகவல் தொழில்​நுட்​ப​வியல் மற்​றும் டிஜிட்​டல் சேவை​கள் துறை, பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகப் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத் துறை, பள்​ளிக்​கல்​வித் துறை, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் நலத் துறை, தொழிலா​ளர் நலன் மற்​றும் திறன் மேம்​பாட்​டுத்​துறை ஆகிய 10 துறை​களின் செயல்​பாடு​கள் குறித்து சுமார் 4 மணி நேரம் ஆய்​வுக் கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள், தலை​மைச் செய​லா​ளர் நா.​முரு​கானந்​தம், பொதுப்​பணித்​துறை செய​லா​ளர் மங்​கத் ராம் சர்​மா, சிறப்பு திட்ட செய​லாக்​கத் துறை செய​லா​ளர் பிரதீப் யாதவ், நிதித்​துறை செய​லா​ளர் த.உதயச்​சந்​திரன் உள்​ளிட்ட அரசு துறை செய​லா​ளர்​கள் மற்​றும் அரசு உயர் அலு​வலர்​கள் கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *