• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நாடு​தழு​விய வகை​யில் இன்று நடை​பெறும் பொது வேலை நிறுத்​தத்​துக்கு தமிழகத்​தில் பல்​வேறு தொழிற்​சங்​கங்​கள் ஆதரவு தெரி​வித்​துள்​ள​தால், அரசு சேவை​கள், வங்​கிப்​ பணி​கள் முடங்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், தமிழகத்​தில் பேருந்​துகள் வழக்​கம்போல் இயங்​கும் என அமைச்​சர் சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

பொதுத்​துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக்​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப்​பெற வேண்​டும், பொதுத்​துறை நிறு​வனங்​களில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய- மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர வேண்​டும் என்​பது உள்​ளிட்ட 17 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, தேசிய அளவில் இன்று பொது வேலைநிறுத்​தப் போராட்​டத்​துக்கு மத்​திய தொழிற்​சங்​கங்​கள் அழைப்பு விடுத்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *