
சென்னை: நாடுதழுவிய வகையில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், அரசு சேவைகள், வங்கிப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய- மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவில் இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.