
சென்னை: கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் தான் அவமரியாதை செய்யப்பட்டதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறி, செல்வப்பெருந்தகை மலிவான அரசியல் செய்வதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, தனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், தன்னை புறக்கணித்தனர் என்வும் கூறியுள்ளார். மேலும், 2000 ஆண்டுகளாக இந்த புறக்கணிப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.