• July 8, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல்: போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா, விடுப்புக்குப் பின்னர் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரிக்குப் பணிக்குத் திரும்பினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித் குமாரை, தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மரண மடைந்தார்.

இவர், மீது நகையைத் திருடியதாக புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே யுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந் தவர். இவர், திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி யில் தாவரவியல் துறையின் தலைவராக உள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *