
சென்னை: ‘தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் முறையாக பராமரிப்பின்றி இருக்கும் நிலையில், விளம்பர ஆசைக்காக அவற்றின் பெயரை முதல்வர் மாற்றியுள்ளார்’ என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று என்றழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை வரவேற்றும், விமர்சித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள் முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டில் கூட பழநி அருகே ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் காயமடைந்தனர். ஆனால் தனது விளம்பர ஆசைக்காக விடுதிகளின் பெயரை முதல்வர் மாற்றியுள்ளார்.