
புதுடெல்லி: 2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், லடாக் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் சுயமாக பங்கேற்கலாம் என்றும் அதற்காக விரைவில் இணையதளம் தொடங்கப்படும் என்றும் மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.