
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை அமைத்த ஒப்பந்ததாரருக்கு திட்ட நிதி வழங்குவதற்கு அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதால் இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பிரசன்ன ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கிருஷ்ணகிரி மாவட்டம் மாடக்கல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஓரடுக்கு ஜல்லி சாலை அமைப்பதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு பணி உத்தரவு வழங்கி அரசாணை வெளியிட்டனர்