
கோவை: “அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எப்போதும் நாங்கள் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என கோவையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.
‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதலாவது பிரச்சாரப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை 7) தொடங்கினார். இதையொட்டி இன்று காலை தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி தரிசனம் செய்தார்.