• July 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் மாநிலத்​தில் உள்ள கோட்​டக் மஹிந்​திரா வங்​கி​யின் ஒரு கிளை மேலா​ளர் சூதாட்​டம் மற்​றும் பந்தய செயலிக்கு அடிமை​யாகி உள்​ளார். இதையடுத்​து, கடந்த 2 ஆண்​டு​களாக பிஹார் அரசின் வங்​கிக் கணக்​கி​லிருந்து கோடிக்​கணக்​கான பணத்தை திருடி சூதாடி அல்​லது பந்​த​யம் கட்டி உள்​ளார். குறிப்​பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்​படுத்​தல் அதி​காரிக்​கான காசோலைகளில் போலி கையெழுத்தை இட்​டும் காசோலை குளோனிங் மூல​மும் மொத்​தம் ரூ.31.93 கோடியை மோசடி செய்​துள்​ளார்.

பிடிப​டா​மல் இருப்​ப​தற்​காக, வாடிக்​கை​யாளர்​களின் ஆதார் மற்​றும் கேஒய்சி விவரங்​களை சட்​ட​விரோத​மாக பயன்​படுத்தி 21 போலி வங்​கிக் கணக்​கு​களை திறந்​துள்​ளார். அதில் பணத்தை பரி​மாற்​றம் செய்​து, அந்​தப் பணத்தை வெளி​நாடு​களில் உள்ள சட்​ட​விரோத பந்தய செயலிகளுக்கு அனுப்பி உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *