• July 7, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர்: தமாகா நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் தஞ்சாவூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற கட்சித் தலைவர் ஜி.கே.​வாசன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திருப்​புவனம் அஜித்​கு​மார் உயி​ரிழப்​பில் பெரும் மர்​மம் இருக்​கிறது. இதில் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி யார்? முழு​மை​யான விசா​ரணை மூலம் இந்த மர்​மங்​களுக்கு விடை​காண வேண்​டும்.மக்​களுக்கு கொடுத்த வாக்​குறு​தி​களை திமுக அரசு நிறைவேற்​ற​வில்​லை. ஆசிரியர்​கள், தொழிலா​ளர்​கள் உள்​ளிட்​டோர் தொடர்ந்து போராட்​டங்​களை நடத்தி வரு​கின்​றனர்.

அதி​முக தலை​மையி​லான கூட்​ட​ணி​யில் பாஜக, தமாகா மற்​றும் ஒரு​மித்த கருத்​துடைய கட்​சிகள்​தான் உள்​ளன. பழனி​சாமி கூட்​ட​ணித் தலை​வ​ராக இருக்​கிறார். இதை அமித்ஷா உறு​திபடுத்​தி​யுள்​ளார். தமிழக மக்​கள் ஆட்சி மாற்​றத்​துக்கு தயா​ராகி​விட்​டார்​கள். அரசின் மீதான அதிருப்​தியை வெளிப்​படை​யாக பேசத் தொடங்​கி​விட்​டனர். எனவே, எங்​கள் கூட்​டணி நிச்​ச​யம் வெற்றி பெறும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *