• July 7, 2025
  • NewsEditor
  • 0

சாத்தூர்: ​விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அருகே பட்​டாசு ஆலை​யில் நேற்று காலை ஏற்​பட்ட பயங்கர வெடி​ விபத்​தில், ஆலையின் 16 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் தொழிலாளி ஒரு​வர் உயி​ரிழந்​தார்.

சிவ​காசி அருகே திருத்​தங்​கலை சேர்ந்​தவர் கணேசன். இவருக்​கு சொந்​த​மான பட்​டாசு ஆலை சாத்​தூர் அருகே உள்ள கீழத்​தா​யில்​பட்​டி​யில் நாக்​பூர் மத்​திய வெடிபொருள் கட்​டுப்​பாட்​டு துறை​யின் உரிமம் பெற்று இயங்​கு​கிறது. இங்கு பேன்ஸி ரக பட்​டாசுகள் தயாரிக்​கப்​படு​கின்​றன. 50-க்​கும் மேற்​பட்ட அறை​களில் 150-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் பணிபுரி​கின்​றனர். இவர்​களில் பலர் வெளி மாநிலத்​தினர். இவர்​கள் ஆலை வளாகத்​திலேயே தங்கி பணி​யாற்​றுகின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *