
சென்னை: சட்டப்பேரவை தேர்தலையொட்டி, 25 தொகுதிகளில் தனி கவனம் செலுத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடந்த முறையைவிட கூடுதல் தொகுதிகளை கேட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கூறிவருவது திமுக தலைமையிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ‘கூட்டணி கட்சியில் இருந்து விலகிவருபவர்களை திமுகவில் சேர்ப்பதில்லை’ என்ற கொள்கையில் இருந்து விலகி, மதிமுக நிர்வாகிகளை சமீபத்தில் சேர்த்துக் கொண்டது திமுக. இது மதிமுகவுக்கு மட்டுமின்றி மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.