
மதுரை: உள்ளாட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும், வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் மனித நேய மக்கள் கட்சி மாநாடு நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் உமர் வரவேற்றார்.
கட்சியின் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான அப்துல்சமது பேசும்போது, “நாட்டில் படிப்படியாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதி நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சதி செய்து பிரதிநிதித்துவம் குறைக்கப்படுகிறது. நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.