
திருப்பூர்: இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கணவன் குடும்பத்தார் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் வீட்டுக்கு நேற்று சென்ற முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கும் ரிதன்யாவின் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரிதன்யா கடைசியாக அவரது தந்தைக்கு அனுப்பிய ஆடியோவை கேட்ட பின்புதான், அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென தனிப்பட்ட முறையில் நான் இங்கு வந்துள்ளேன். ரிதன்யா உயிரிழப்புக்கு முன்பு அனுப்பிய ஆடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக உள்ளது. ரிதன்யா தரப்பு வழக்கறிஞரிடம் பேசினேன். முதல் தகவல் அறிக்கையையும் படித்தேன்.