
திருப்பூர்: "ரிதன்யாவின் ஆடியோ சாட்சியங்களை யாராலும் உடைக்க முடியாது. சாட்சியத்தை விசாரித்தாலே ஒரு வாரத்தில் தண்டனை கொடுத்து விடலாம்" என முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
கணவன் குடும்பத்தார் கொடுமையால் அவிநாசியில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘எனக்கும் ரிதன்யாவின் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ரிதன்யா கடைசியாக அவரது தந்தைக்கு அனுப்பிய ஆடியோவை கேட்ட பின்பு தான் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென, தனிபட்ட முறையில் நான் இங்கு வந்துள்ளேன். ரிதன்யா இறப்புக்கு முன்பு அனுப்பிய ஆடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக உள்ளது.