
புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) இயக்கி வருகிறது. தற்போது புதிதாக அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட 30 இடங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுலாத் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமாயண யாத்ரா என்ற பெயரில் ரயில்களை ஐஆர்சிடிசி இயக்கி வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சுற்றுலாத் திட்டம் 5-வது சிறப்பு ராமாயணா சிறப்பு ரயிலாகும்.