• July 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மூத்த தமிழறிஞர் வா.மு.சேது​ராமன் கால​மா​னார். அவருக்கு வயது 91. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். காவல் துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மூத்த தமிழறிஞர் பெருங்​கவிக்கோ வா.​மு.சேது​ராமன்​(91) உடல்​நலக்​குறைவு காரண​மாக சென்​னை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். ராம​நாத​புரம் மாவட்​டம், முதுகுளத்​தூர் அருகே ஆண்​ட​நாயகபுரத்​தில் 1935-ம் ஆண்டு பிறந்த சேது​ராமன், சென்னை பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெற்​றார். விரு​கம்​பாக்​கம் சின்​மயா நகரில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார். அவருக்கு மகன்​கள் திரு​வள்ளுவர், க​வியரசன், ஆண்​டவர், தமிழ் மணி​கண்​டன், மகள் பூங்​கொடி உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *