
கரூர்: வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ்கிப்ஸன் என்பவர், கரூர் அருகேயுள்ள கோதூரில் 7 ஏக்கர் நிலம் வாங்குவதற்காக, கரூரைச் சேர்ந்த நிலத்தரகர் ஆர்.எஸ்.ராஜாவிடம் முன்பணமாக ரூ.96 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க காலதாமதம் செய்ததால், நில உரிமையாளர்கள் அந்நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர். இதனால் ரூ.96 லட்சத்தை பிரின்ஸ்கிப்ஸனிடம், ஆர்.எஸ்.ராஜா திரும்பக் கொடுத்துள்ளார்.