
பெங்களூரு: வலிமையான நிலையில் இருந்து அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும், காலக்கெடுவுக்கு கட்டுப்பட்டு அல்ல என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஏற்கெனவே செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “இரு தரப்பினருக்கும் பயன் அளிக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே, அது சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க ஒப்பந்தமாகவும் இருக்கும். எங்களின் தேச நலன்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதை மனதில் கொண்டே எங்களின் முடிவு இருக்கும். வளர்ந்த நாடுகளுடன் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது” என்று கூறியிருந்தார்.