
முன்பு நாம் எழுதி இருந்தபடியே சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக திமுக கவுனசிலர்களுடன் கூட்டணி போட்டு அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த 2-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானம் வெற்றிபெற்று உமா மகேஸ்வரி தனது பதவியை இழந்திருக்கிறார்.
மொத்தம் 30 வார்டுகளைக் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் திமுக வென்றது 9 வார்டுகளை மட்டும் தான். 12 வார்டுகளை அதிமுக வென்றிருந்தது. எஞ்சிய வார்டுகளை கூட்டணிக் கட்சிகளும் சுயேச்சைகளும் கைப்பற்றினர். இதனால் சேர்மன் தேர்தலில் திமுக-வும் அதிமுக-வும் தலா 15 வாக்குகளைப் பெற்றன. இதையடுத்து நடந்த அதிர்ஷ்ட குலுக்கலில் திமுக-வின் உமா மகேஸ்வரி சேர்மனானார். அதேசமயம், அதிமுக-வைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜு 16 வாக்குகளைப் பெற்று திமுக-வை தோற்கடித்து வைஸ் சேர்மனானார்.