
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை, மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் 69 பேர் உயிரிழந்ததாகவும், ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். மேலும், மாநிலம் ‘போர் போன்ற இயற்கைப் பேரிடரை’ எதிர்த்து போராடுவதாகவும் அவர் கூறினார்.
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சட்டமன்ற துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடனான உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங், “தற்போதைய இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இமாச்சலப் பிரதேச அரசு மாதத்துக்கு ரூ.5,000 வழங்கும் என்று முடிவு செய்துள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உணவு மற்றும் ரேஷன் விநியோகத்தையும் அரசு உறுதி செய்யும்.