• July 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் ஸ்ரவண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் பாதைகளில் உணவகம் நடத்​தும் உரிமை​யாளர் பெயர் உள்​ளிட்ட விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்த உத்​தரவை அமல்​படுத்​துகின்​றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்​களு​டன் சோதனை நடத்தி வரு​கிறார். அதன்​படி உணவக பணி​யாளர்​களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்​தது சர்ச்​சை​யானது. எனினும், உணவக பணி​யாளர் தஜும்​முல் என்​பவர், கடை உரிமை​யாளர் சொன்​னபடி கோபால் என பெயரை மாற்றி வேலை செய்​வ​தாக ஒப்​புக்​கொண்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *