
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் ஸ்ரவண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் பாதைகளில் உணவகம் நடத்தும் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்துகின்றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்களுடன் சோதனை நடத்தி வருகிறார். அதன்படி உணவக பணியாளர்களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்தது சர்ச்சையானது. எனினும், உணவக பணியாளர் தஜும்முல் என்பவர், கடை உரிமையாளர் சொன்னபடி கோபால் என பெயரை மாற்றி வேலை செய்வதாக ஒப்புக்கொண்டார்.