• July 5, 2025
  • NewsEditor
  • 0

திருப்புவனம் / மதுரை: அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை அளித்​துள்​ளது கண்​துடைப்​பாகும். அவர் இருக்​குமிடத்​திலிருந்து 80 கி.மீ. தொலை​வில் காரைக்​குடி​யில் வேலை கொடுத்​துள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​குதலில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய நயி​னார் நாகேந்​திரன், ரூ.5 லட்​சம் நிதி​ உதவி அளித்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: திமுக ஆட்​சி​யில் கடந்த 4 ஆண்​டு​களில் 24 விசா​ரணை மரணங்​கள் நடந்​துள்​ளன. எஃப்​ஐஆர் பதிவு செய்​யாமல், அஜித்​கு​மாரை காவல் நிலை​யத்​தில் அடித்​துள்​ளனர். பின்​னர் தனிப்​படை போலீ​ஸார் 2 நாட்​கள் அவரைத் தாக்​கி​யுள்​ளனர். தலை​மைச் செயல​கத்​திலிருந்து ஒரு அதி​காரி சொன்​னார் என்​ப​தற்​காக 6 போலீ​ஸார் சேர்ந்து அடித்​துள்​ளனர். 3 இடங்​களில் சிகரெட்​டால் சுட்​டுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *