
சென்னை: தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் அவருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தி, கடந்த 2021-ம் ஆண்டு முதல் ‘தகைசால் தமிழர்’ என்ற விருது வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா, நல்லகண்ணு, கி.வீரமணி, குமரி அனந்தன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.