• July 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​பாமக​வில் இருந்து அக்​கட்சி எம்​எல்ஏ இரா.அருள் நீக்​கப்​பட்​டதை தொடர்ந்து அவர் வகிக்​கும் கொறடா பதவி​யில் இருந்து மாற்​றக்​கோரி பேரவை தலை​வரிடம் அன்​புமணி சார்​பில் கடிதம் வழங்​கப்​பட்​டது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக பாமக சேலம் மாநகர் மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்​எல்ஏ இரா.அருளை கட்​சி​யின் இணை பொதுச்​செய​லா​ள​ராக ராம​தாஸ் நியமித்​தார். இதையடுத்​து, மாவட்ட செய​லா​ளர் பொறுப்​பில் இருந்து இரா.அருளை நீக்​கிய அன்​புமணி, அந்த பொறுப்​பில் க.சர​வணன் என்​பவரை நியமித்​தார். தொடர்ந்​து, இரா.அருளை கட்​சி​யின் அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் நீக்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *