• July 4, 2025
  • NewsEditor
  • 0

பாமகவில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அணியில் இருப்பவர் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள். இவர், பாமக தலைவர் அன்புமணிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தார். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி நேற்று முன்தினம் அறிவித்தார். இதற்கு எதிர் வினையாற்றிய எம்எல்ஏ அருள், தன்னை நீக்குவதற்கு நிறுவனரும், தலைவராக உள்ள ராமதாசுக்கு மட்டும் அதிகாரம் உள்ளது என தெரிவித்தார். எம்எல்ஏ அருளை நீக்குவதற்கு தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ராமதாசும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாசை அருள் எம்எல்ஏ நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராமதாசும், அன்புமணியும் இணைந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். விரைவில் இணைவார்கள். தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி வருவார், வெற்றி கூட்டணியை உருவாக்கி தருவார். அன்புமணி எனது சகோதரர். அவரை நிச்சயம் சந்திப்பேன். நான் எந்த தவறும் செய்யவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *