
புதுச்சேரி: புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் முதல்முறையாக வந்திருக்கிறது. இதனால் பயணிகளின் வருகைக்காக கடல் வழிப் பாதை திறக்கப்பட்டுள்ளது. இனி வாரம் தோறும் கப்பல் வரும் என சுற்றுலாத்துறை செயலர் தெரிவித்தார். கப்பல் வருகையை எதிர்த்து ஆளும் அரசின் கூட்டணிக்கட்சியான அதிமுக மறியல் போராட்டம் நடத்தியது.
புதுச்சேரியில் கடந்த திமுக – காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த சுற்றுலா சொகுசு கப்பல் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சொகுசு கப்பலில் சூதாட்டம் நடைபெறும் என்பதால் நம் மாநில கலாச்சாரம் சீரழியும் என கடுமையாக எதிர்த்தன. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.