• July 4, 2025
  • NewsEditor
  • 0

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் நாளிதழ் பேட்டி ஒன்றில், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பாஜக-வும் இடம்பெறும். அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்” என்று இபிஎஸ் தரப்புக்கு இன்னொரு ஷாக் கொடுத்திருக்கிறார்.

2024 மக்​கள​வைத் தேர்​தலின் போது அதி​முக கூட்​ட​ணிக்கு பாஜக பகீரத பிர​யத்​தனம் செய்​தது. ஆனால் அண்​ணா​மலை​யின் அதிரடிகளால் அதிருப்தி கொண்ட இபிஎஸ், “பாஜக-வுடன் இனி எந்​தக் காலத்​தி​லும் கூட்​டணி இல்​லை” என திட்​ட​வட்​ட​மாக அறி​வித்​தார். அதி​முக-​வின் இந்த முடி​வால் உதிரிக் கட்​சிகளை கூட்டு சேர்த்​துக் கொண்டு தேர்​தலைச் சந்​தித்த பாஜக-வுக்கு ஓர் இடம் கூட கிடைக்​க​வில்​லை. இதனால் இபிஎஸ் மீதும் அதி​முக மீதும் கடும் கோபத்​தில் இருந்​தார் அமித் ஷா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *