
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அதிமுக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், திமுகவினர் தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்ததாக ஆடியோ வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் பெல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வானந்தம் (27). மக்காச்சோள வியாபாரி. குண்டடம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இவரது மனைவி முத்துபிரியா (27) நவநாரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.