
சென்னை: மாநிலத்தின் தலைநகரான சென்னையில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றாதது ஏன் என்றும், இதில் ஏதாவது சிக்கல் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், வரும் ஜூலை 24-ம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில, நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை கடந்த ஏப்.28-ம் தேதிக்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தார்.