
சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனையில் தவறான வழிகாட்டுதல்களை டாஸ்மாக் அதிகாரிகள் வழங்குவதாகவும், இதனால் முன்பை விட வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அனைத்து டாஸ்மாக் கடைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
குறிப்பாக, மதுபானங்களுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வாங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கும் போது, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி மதுபாட்டில்கள் வாங்குவோருக்கு அதற்கான ரசீது வழங்கப்படும் எனவும், இதன் மூலம் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும், முறைகேடுகள் குறையும் என தெரிவிக்கப்பட்டது.