
மதுரை: போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் சந்தித்து ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமார் (29), இவரை தங்கநகை திருட்டு தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையில் தாக்கியதில் ஜூன் 29-ம் தேதி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்நிலைய மரண சம்பவத்தை கண்டித்தும் நீதி கேட்டும் தவெக சார்பில் ஜூன் 3-ல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று தவெக தலைவர் விஜய் மடப்புரத்தில் உள்ள அஜித்குமார் வீட்டுக்குசென்றார்.