
சென்னை: பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பாஸ்போர்ட் சேவையை பெறும் வகையில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி ( Mobile Passport Seva van) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: “பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே மிகவும் குறைவாக இருக்கிறது. இதில் சென்னை மாவட்டமும் அடங்கும். அனைத்து தரப்பினரும் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது மிகவும் எளிமைப்படுத்தப் பட்டுள்ளது.