
கோவில்பட்டி: மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தை புதுப்பிக்காத தமிழக அரசை கண்டித்து எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தலைமை வகித்து பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு சம்பவம் சாத்தான்குளத்தில் நடந்தது. அது தவறுதான். அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, அதில் குற்றச்சாட்டப்பட்டவர்கள் இன்று வரை வெளி வர முடியாத நிலை உள்ளது. ஆனால், இந்த ஆட்சியில் இதுவரை 25 சம்பவங்கள் நடந்துள்ளன.