
விழுப்புரம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் இடம்பெற்றார். தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தாலும், இருவக்கும் இடையே அரசியல் ரீதியாக மனகசப்பு இருந்தது. 2002-ல் வாழப்பாடி ராமமூர்த்தி மறைந்த பிறகு, தைலாபுரத்துக்கு வருவதை அவரது குடும்பம் முற்றிலும் நிறுத்திக் கொண்டது.