
சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழக அரசை கண்டித்தும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (3-ம் தேதி) காலை 10 மணிக்கு எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.