
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், திருப்புவனம் கொடூர சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: திருப்புவனம் கொடூர நிகழ்வு பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். விரைந்து கைதும் செய்யப்பட்டனர்.