• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யில் ரூ.19.44 கோடி​யில் 13 கால்​நடை காப்​பகங்​கள் கட்​டும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக மாநகராட்சி தெரி​வித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறாக தெருக்கள் மற்​றும் சாலைகளில் சுற்​றித்​திரி​யும் மாடு​களைக் கட்​டுப்​படுத்​தும் வகை​யில், ஒவ்​வொரு மண்​டலத்​துக்​கும் ஒரு கால்​நடை காப்பகம் அமைக்க மூலதன நிதி​யின் கீழ் ரூ.19.44 கோடி​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு அதற்​கான பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அதன்​படி திரு​வொற்​றியூர் – டி.பி.பி.​சாலை, மணலி – செட்​டிமேடு, மாதவரம் – சிஎம்​டிஏ லாரி முனை​யம், தண்​டை​யார்​பேட்டை – செல்​ல​வாயல், ராயபுரம் – பேசின் பாலச் சாலை மற்​றும் மூர்​மார்க்​கெட், அண்​ணாநகர் – செனாய் நகர், தேனாம்​பேட்டை – பீட்​டர்ஸ் சாலை, கோடம்​பாக்​கம் – காந்தி நகர், வளசர​வாக்​கம் – நொளம்​பூர், யூனியன் சாலை, ஆலந்​தூர் – பி.​வி.நகர், பெருங்​குடி – வீர​பாண்​டிய கட்​டபொம்​மன் குறுக்​குத் தெரு மற்​றும் தாம்​பரம் – வேளச்​சேரி பிர​தான சாலை, சோழிங்​கநல்​லூர் – பயோ சிஎன்ஜி நிலை​யம் என 13 கால்​நடை காப்​பகங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *