
புதுடெல்லி: திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நோய் கட்டுப்பாட்டு தேசிய மையம் (என்சிடிசி) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்து.
கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் வரை நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களில் சிலர் திடீர் மரணங்களை சந்தித்தனர். இதற்கு இவர்கள் செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என வதந்தி பரவியது.