• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திருப்​புவனம் இளைஞர் கொலை​யில் தொடர்​புடைய ஐஏஎஸ் அதி​காரி யார் என்​பதை தமிழக அரசு விளக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக காவல்​துறையை, அதி​காரம் படைத்த சிலருக்​கான அடி​யாள் படை​யாக செயல்பட வைத்​து, அப்​பாவி இளைஞர் ஒரு​வரின் கொலைக்கு காரண​மாக திமுக அரசு இருந்​துள்​ளது.

திமுக எம்​எல்ஏ உள்​ளிட்​டோர் அஜித்​கு​மாரின் வீட்​டிலேயே முகாமிட்டு யாரை​யும் சுதந்​திர​மாக பேச முடி​யாத​வாறு தடுத்​துள்​ளனர். பாமக​வின் பொருளாள​ரும் பல வகை​களில் தடுக்​கப்​பட்​டிருக்​கிறார்.

அப்​பாவி இளைஞரை அடித்து விசா​ரணை நடத்த தூண்​டிய ஐஏஎஸ் அதி​காரி யார் என்​பதை தமிழக அரசு விளக்க வேண்​டும். இதில் தொடர்​புடைய காவல் துறை உயர​தி​காரி​கள் அனை​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​படு​வதுடன், கைதும் செய்​யப்பட வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *