• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களுக்​கான திருமண முன்​பணம் ரூ.5 லட்​ச​மாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள், அவர்​களின் பிள்​ளை​களுக்​கான திருமண முன்​பணம் அரசால் வழங்​கப்​படு​கிறது. முன்​ன​தாக கடந்த 1989-ம் ஆண்​டு, அரசு ஊழியர் அல்​லது அவரது மகன் திரு​மணத்​துக்கு ரூ.3 ஆயிரம், பெண் ஊழியர் அல்​லது மகள் திரு​மணத்​துக்கு ரூ.5 ஆயிரம் முன்​பண​மாக வழங்​கப்​பட்​டது. அதன்​பின், 1995-ல் இத்​தொகை ரூ.6 ஆயிரம் மற்​றும் 10 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டது.

இந்​நிலை​யில், சட்​டப்​பேர​வை​யில் கடந்த பட்​ஜெட் கூட்​டத்​ தொடரில் 110 விதி​யின்​கீழ் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ‘‘அரசுப் பணியாளர்கள் மற்​றும் ஆசிரியர்​கள் தமது பணிக்​காலத்​தில் தேவை​யின் அடிப்​படை​யில் திருமண முன்​பண​மாக இது​வரை பெண் ஊழியர்​களுக்கு ரூ.10 ஆயிரம் மற்​றும் ஆண்​களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்​கப்​படு​கிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலு​கள், ஆசிரியர்​கள் அனை​வருக்​ககும் பொது​வாக ரூ.5 லட்​ச​மாக உயர்த்தி வழங்​கப்​படும்’’ என அறி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *